Wednesday, October 7, 2015

பனை - பூப்பூத்தால் .... இங்கே அது அழிவின் அறிகுறி !!!!!!!!!


பூப்பூத்தால்
அது காயாகி கனியாகி உதிர்ந்து
விதையாகி விருட்சமாகுமென
ஒருமகிழ்ச்சி வந்து
ஒட்டிக்கொள்ளும் பொதுவாய் ...!

ஆனால்..இங்கே
முளைத்து வளர்ந்து
காய்த்து கனிந்து
அனைத்துப் பலனையும் தந்து
எல்லாம் முடிந்த பின்பு
தனது முடிவை
உலகுக்கு அறிவிக்க
உச்சியில் பூத்து
உதிர்ந்து போகிறது
பனையொன்று !!!!!!!!

...இது திண்டிவனம் :

இது மதுரை :